அவிநாசி:'பொதுமக்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ள துவங்கியிருப்பதால், தொற்றுப்பரவல் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.அவிநாசியை பொறுத்தவரை, கொரோனா தொற்றுப்பரவல் சமீப நாட்களாக வெகுவாக குறைந்து வருகிறது.இது குறித்து, அரசு மருத்துவர் கூறியதாவது:முந்தைய நாட்களில் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களின் குடும்ப உறுப்பினர்கள், தொடர்பில் இருந்தவர்களுக்கும் தொற்றுப்பரவல் உறுதி செய்யப்பட்டது. ஆனால், சமீப நாட்களாக தொற்று உறுதியானவர்களின் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்யும் போது, அவர்களுக்கு தொற்று பாதிப்பு தென்படுவ தில்லை இது, வரவேற்க கூடியது.பொதுமக்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ள துவங்கியிருப்பது தான் இதற்கு காரணம். 'கோவிட் -19' மட்டுமல்ல, எந்தவொரு நோயும் நம்மை அண்டாமல் இருக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வது மட்டுமே நிரந்தர தீர்வு.அந்த அடிப்படையில், நோய் எதிர்ப்பாற்றல் வழங்கும் உணவு, கஷாயம் போன்றவற்றை அவ்வப்போது, பொதுமக்கள் உட்கொள்ள வேண்டும்; இதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE