திருப்பூர்:திருப்பூர், காந்திநகரில், த.மா.கா., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு, மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் மோகன் கார்த்திக், செயலாளர் சேதுபதி முன்னிலை வகித்தார்.அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அளித்தது, ஆன்லைன் சூதாட்டத் துக்கு தடைவிதித்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.'கட்சியின் ஏழாம் ஆண்டு துவக்க விழாவை, வரும், 29ல், கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடுவது, வாகன பேரணி நடத்துவது.டிச., 28ம் தேதி, கட்சி நிறுவனர் வாசன் பிறந்த நாள் விழா அனைத்து பகுதியிலும் கொண்டாடுவது,' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE