பந்தலுார்:பந்தலுார் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில், வரைவு வாக்காளர் பட்டியல்கள் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.மக்கள், பெயர் சேர்த்தல் மற்றும் முகவரி மாற்றம், திருத்தங்கள் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். பணிகளை, கூடலுார் ஆர்.டி.ஓ. ராஜ்குமார் தலைமையில், தாசில்தார் மகேஸ்வரி, தேர்தல் துணை தாசில்தார் சதீஷ்நாயக், வருவாய் ஆய்வாளர் முரளி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.'திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை, வாக்காளர்களின், விண்ணப்பங்களை பெற்று தாசில்தார் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்; ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் வாக்காளர்களின் சந்தேகங்களுக்கு முறையாக விளக்கம் அளிக்க வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE