நாகர்கோவில்:அ.தி.மு.க., எம்.பி. விஜயகுமார் வீட்டின் அருகில் கண்டெடுக்கப்பட்டது வெடிகுண்டா என்பது பற்றி நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.நாகர்கோவிலில் அவரது வீட்டின் முன்புறம் வெடிகுண்டு போன்ற ஒரு பொ ருளும், வெடி மருந்தும் சிதறி கிடந்தது. வெடிகுண்டு தடுப்பு போலீசார் அதை அப்புறப்படுத்தினர். அவரது வீட்டிலிருந்து மோப்ப நாய், சிறிது துாரம் ஓடி நின்று விட்டது. போலீசார் கைப்பற்றியது வெடி குண்டுதானா, அல் லது பட்டாசு வகையை சேர்ந்த எறிந்தால்வெடிக்கும் பட்டாசா என நேசமணி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE