சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில், எரிவாயு நுகர்வோர், மாதாந்திர குறைதீர் கூட்டம், நேற்று நடந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதன் தலைமை வகித்தார். அதில், எரிவாயு மானியத்தை, நுகர்வோர் விரும்பும் வங்கியில், வரவு வைத்து தர வேண்டும்; 'டெலிவரி' செய்யும்போது, காஸ் சிலிண்டர் எடையை சரிபார்த்து வினியோகிக்க வேண்டும்; காஸ் கட்டண ரசீதில், ஒவ்வொரு முறையும் மானியத்தொகையை குறிப்பிட வேண்டும்; நிர்ணயித்த விலையை கூட, 'டெலிவரி' பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. எண்ணெய் நிறுவன அதிகாரிகள், காஸ் வினியோக முகவர்கள், தன்னார்வ அமைப்பினர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE