தலைவாசல்: போலீசார், 80 லிட்டர் சாராயம், 930 கிலோ வெல்லத்தை பறிமுதல் செய்து, மூன்று பேரை கைது செய்தனர்.
தலைவாசல் போலீசாருக்கு, சிறுவாச்சூரில், சாராயம் விற்பதாக தகவல் கிடைத்தது. அவர்கள், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, காட்டுக்கொட்டாய் பகுதியில், சாராய விற்பனையில் ஈடுபட்ட இருவரை மடக்கினர். விசாரணையில், வெள்ளிமலை, தாழ்பாச்சேரியை சேர்ந்த, ராமர், 20, சிறுவாச்சூர் மாரிமுத்து, 41, என தெரிந்தது. அவர்களிடம், 80 லிட்டர் சாராயம், இரு ஸ்பிளண்டர் பைக்கை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர். அதேபோல், தலைவாசல் பஸ் ஸ்டாண்டில், சோதனை செய்தபோது, அங்குள்ள மளிகை கடையில், சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் வெல்லம் விற்பதை கண்டுபிடித்தனர். கடையில் பதுக்கியிருந்த, 930 கிலோ வெல்லத்தை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளரான, சிறுவாச்சூரை சேர்ந்த, ராஜசேகரன், 58, என்பவரையும், போலீசார் கைது செய்தனர்.
மேலும் 2 பேர்: கெங்கவல்லி போலீசார், 'ரோந்து' பணியில் ஈடுபட்டபோது, சாராய விற்பனையில் ஈடுபட்ட, கூடமலை பிரபாகரன், 28, சாத்தப்பாடி சூர்யா, 27, ஆகியோரை, நேற்று, கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE