தலைவாசல்: டாஸ்மாக் கடையில், மதுபாட்டில்களை திருடி விற்ற இருவரை, போலீசார் கைது செய்தனர். தலைவாசல், சிறுவாச்சூர் ஊராட்சி, அண்ணா நகர் சாலையில், டாஸ்மாக் கடை உள்ளது. அதன் பூட்டை, நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் உடைத்து, மதுபாட்டில்கள், பணம் திருடியுள்ளனர். இதுகுறித்து, கடை ஊழியர்கள் அளித்த புகார்படி, தலைவாசல் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், டாஸ்மாக் கடை அருகே, சந்துக்கடை நடத்திய, சிறுவாச்சூரை சேர்ந்த, ஆதிமூலம், 40, மாரிமுத்து, 55, ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து, 52 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில், விற்பனை பணம், 3,000 ரூபாய் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதனால், இருவரையும், போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE