ஈரோடு: உலக சிக்கன சேமிப்பு நாளையொட்டி, தமிழக சிறு சேமிப்பு துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு, ஈரோடு மாவட்ட அளவிலான போட்டி, ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில் ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான, 36 பேர் பங்கேற்றனர். சிறு சேமிப்பின் அவசியம் குறித்த தலைப்புகளில் பேச்சு, கட்டுரை, கவிதை, வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. ஈரோடு கல்வி மாவட்ட அலுவலர் மாதேசன் துவக்கி வைத்தார். முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும். போட்டி நடுவர்களாக பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் செயல்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE