சென்னிமலை: பெருந்துறை அருகே அரசு பஸ் கவிழ்ந்ததில், 35க்கும் மேற்பட்ட பயணிகள், படுகாயம் அடைந்தனர்.
கோவையில் இருந்து சேலத்துக்கு, ஒரு அரசு பஸ் நேற்று புறப்பட்டது. அதில், 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பெருந்துறை அருகே, திருவாச்சி, கூரபாளையம் பிரிவு பகுதியில், மாலை, 4:00 மணியளவில் சென்றபோது, பஸ்ஸை முந்திய ஒரு லாரி, அதேவேகத்தில் இடதுபுறம் திரும்பியது. இதனால் லாரி மீது மோதிய அரசு பஸ், கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பு சுவரில் சாய்ந்து கவிழ்ந்தது. இதில், 22 ஆண்கள், 13 பெண்கள் உள்பட, 35 பயணிகள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அனைவரும் மீட்கப்பட்டு, அவசரகால ஆம்புலன்ஸ் வாகனத்தில், ஈரோடு, பெருந்துறை அரசு மருத்துவ மனைகள், தனியார் மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து நடந்த இடத்தை கலெக்டர் கதிரவன், எஸ்.பி., தங்கதுரை பார்வையிட்டு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டனர். விபத்து குறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE