கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அடுத்த என்.தட்டக்கல் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன், 40; விவசாயி. இவர் மனைவி பழனியம்மாள், 32; சாப்ட்வேர் கம்பெனி ஊழியர். இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில், பழனியம்மாள், தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த, 22 மாலை, கேசவன் அங்கு சென்று தன்னுடன் வரும்படி பழனியம்மாளை அழைத்துள்ளார். அவர் மறுத்ததால், ஆத்திரமடைந்த கேசவன், பழனியம்மாளின் இடது கையில் கத்தியால் குத்தியுள்ளார். அவரது மாமனார் கந்தசாமி, 68; தடுக்க வந்துள்ளார். அவரையும், நெஞ்சில் குத்தியுள்ளார்.இருவரும் படுகாயத்துடன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து நாகரசம்பட்டி போலீசில் பழனியம்மாள் அளித்த புகார்படி, கேசவன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. தன் மனைவியை குடும்ப நடத்த அழைக்க சென்ற போது, மாமனார் கந்தசாமி, மச்சினன்கள் சங்கர், 39; சக்தி, 28; சங்கர் மனைவி அர்ச்சனா, 25; ஆகிய நான்கு பேரும் தாக்கியதாக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்ந்து, கேசவன் புகார் அளித்துள்ளார். இருதரப்பை சேர்ந்த ஐந்து பேர் மீது, நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE