காரிமங்கலம்: காரிமங்கலம் வாரச்சந்தையில், ஒரு கோடியே, ஏழு லட்சம் ரூபாய்க்கு மாடுகள் விற்பனையாகின. தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் நேற்று கூடிய சந்தைக்கு, ஜெர்சி, கறுப்பு வெள்ளை, நாட்டு மாடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஜெர்சி மாடு, 32 ஆயிரம் முதல், 40 ஆயிரம் ரூபாய், கறுப்பு வெள்ளை, 27 ஆயிரம் முதல், 37 ஆயிரம் ரூபாய், நாட்டுமாடு, 40 ஆயிரம் முதல், 48 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகின. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கோவை பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் மாடுகளை வாங்கி சென்றனர். சந்தையில் மொத்தம், 590 மாடுகளை விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அதில், 415 மாடுகள் விற்பனையானதில், ஒரு கோடியே, ஏழு லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE