சேலம்: மருத்துவம் படிக்க, அரசு பள்ளி மாணவர், 27 பேருக்கு, 'சீட்' கிடைத்ததால், சேலம் முதலிடத்தை பிடித்தது. இதனால், ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி நிர்வாகம் பாராட்டு தெரிவித்துள்ளது.
'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி தரவரிசை பட்டியல் தயாரித்து நடந்த கலந்தாய்வில், 399 பேருக்கு, 'சீட்' கிடைத்துள்ளது. இதில், சேலம் மாவட்டத்தில், அரசு மருத்துவ கல்லூரியில், 19, சுயநிதி கல்லூரியில், 7 என, 26 பேருக்கு எம்.பி.பி.எஸ்., சீட், சுயநிதி பல் மருத்துவ கல்லூரியில், ஒரு சீட் என, 27 பேருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதன்மூலம், அரசு பள்ளி மாணவர்கள் ஒதுக்கீட்டில், அதிக மாணவர்கள் சேர்ந்த மாவட்டமாக, சேலம் முதலிடத்தில் உள்ளது. சென்னை, 23 எம்.பி.பி.எஸ்., 3 பி.டி.எஸ்., என, இரண்டாம் இடத்திலும், ஈரோடு, திருவள்ளூர் மாவட்டங்கள், 22 சீட்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. மாநில அளவில் அதிக மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., சேர ஒத்துழைப்பு கொடுத்த, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE