பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்ட, அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில், பள்ளிபாளையத்தில் மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகம், பொதுமக்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட அகில பாரத ஐயப்பா சேவா சங்க பொதுக்குழு கூட்டம், மற்றும் நோட்டு புத்தகம், வேட்டி சேலை வழங்குதல், பள்ளிபாளையம் சங்க புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு உள்ளிட்ட ஐம்பெரும் விழா பள்ளிபாளையத்தில் நடந்தது. தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலர் ஜெகதீஷ் பங்கேற்று பள்ளி மாணவ, மாணவியர், 50 பேருக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள், 50 முதியோருக்கு இலவச வேட்டி, சேலை வழங்கினார். மேலும், புதிய நிர்வாகிகளை பொறுப்பில் அமர்த்தி, தேர்தல் அலுவலர்களை பாராட்டினார். நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE