ப.வேலூர்: வேலகவுண்டம்பட்டி அருகே, மாடிப்படியில் ஏறிய வட மாநில தொழிலாளி தவறி விழுந்து இறந்தார். வேலகவுண்டம்பட்டி அடுத்த, எரையம்பட்டியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த, 40 பேர் பணி புரிகின்றனர். மணிபூசன் ராய், 32, என்பவர் நேற்று முன்தினம் இரவு, கோழித் தீவன மூட்டையை மேல் பகுதிக்கு சென்றார். படிக்கட்டில் கால் வழுக்கியதில் நிலை தடுமாறி தீவன மூட்டையுடன் தரையில்விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்த தொழிலாளர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். வேலகவுண்டம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE