மல்லசமுத்திரம்: குமராண்டிபாளையத்தில், சிதிலமடைந்து காணப்படும் தண்ணீர் தொட்டியை இடித்துவிட்டு புதிய தொட்டி கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.. எலச்சிபாளையம் ஒன்றியம், லத்துவாடி பஞ்., குமராண்டிபாளையத்தில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன் தண்ணீர்தொட்டி கட்டப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக மழை, வெப்பம் போன்ற இயற்கை சீற்றங்களால், தொட்டி சிதிலமடைந்து, தூண்களில் இருக்கும் சிலாப் கற்கள் உதிர்ந்து, கம்பிகள் ஆங்காங்கே தெரிகின்றன. இப்பகுதிமக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்தில் முறையிட்டும், இதுவரையில் நடவடிக்கை எடுக்கபடவில்லை. எனவே, தொட்டியை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய தொட்டி கட்ட வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE