கரூர்: கரூர் நகராட்சி ஊழியர், புது மாப்பிள்ளை ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். கரூர் வ.உ.சி., தெருவை சேர்ந்தவர் ஜெயபால், 41; நகராட்சி அலுவலகத்தில், உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த அவர், நேற்று முன்தினம், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
* கரூர் அருகே பாகநத்தம் பகுதியை சேர்ந்த, முருகேசன் மகன் சரவணன், 21; டெய்லர். இவருக்கு, இரண்டரை மாதங்களுக்கு முன், சுந்தர பாண்டியம்மாள், 20, என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம், வீட்டில் சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE