கரூர்: கரூர் அருகே சர்ச் கண்ணாடிகளை உடைத்ததாக, முன்னாள் பாதிரியாரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கீழ் பாகம் ராஜா நகரை சேர்ந்தவர் செல்வமலர், 41; இவர், சின்ன ஆண்டாங்கோவில் தெருவில் உள்ள ஏ.ஜி., சர்ச்சில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், முன் விரோதம் காரணமாக சர்ச்சின் முன்னாள் பாதிரியார் மோசஸ் துரை கண்ணு, 58, அவரது மகள் எஸ்தர் விமலா ராணி, 30, ஆகியோர் கடந்த, 22 ல் சர்ச்சின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். அதை தட்டி கேட்ட செல்வமலர், மலர்விழி, 39, ஆகியோருக்கு, மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, செல்வமலர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, மோசஸ் துரைகண்ணுவை, கரூர் டவுன் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE