கரூர்: கரூர் அருகே திருகாம்புலியூரில், போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், குழாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல, வடிகால் வசதி இல்லை. இதனால், சின்டெக்ஸ் தொட்டியை சுற்றி, கழிவுநீர் அதிகளவில் தேங்கியுள்ளது. அப்பகுதியில், கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். தொற்று நோய் பரவும் அச்சத்தில் பகுதியினர் உள்ளனர். எனவே, போர்வெல் குழாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல, வடிகால் அமைக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE