கள்ளக்குறிச்சி : எலவனாசூர்கோட்டை அருகே சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை ஊ.கீரனுார் காலனியைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் மணிராஜ், 28; இவர், கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி சாலபாக்கம் பகுதியில் ஆடு மேய்த்த 16 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார்.எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து மணிராஜை கைது செய்தனர். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., ஜியாவுல் ஹக், கலெக்டர் கிரண் குராலாவுக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில், மணிராஜை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.இதற்கான உத்தரவை கடலுார் மத்திய சிறையில் உள்ள மணிராஜிடம், எலவனாசூர்கோட்டை போலீசார் வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE