சென்னை: நிவர் புயல் காரணமாக நாளை (நவ.,26) 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை விடப்படுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக ஏரியில் இன்று விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனை முதல்வர் பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, 'நிவர் புயல் காரணமாக நாளை (நவ.,26) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை விடப்படுகிறது. இதற்கான அரசாணை சிறிது நேரத்தில் வெளியிடப்படும்,' என தெரிவித்தார். நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று அரசு விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE