திருப்பதி : திருமலை ஏழுமலையானை தரிசிக்க, ஒரு நாள் பயணமாக நேற்று காலை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திருப்பதிக்கு வந்தார்.
திருப்பதி விமான நிலையத்தில் அவரை, ஆந்திர கவர்னர் பிஸ்வபூஷன் ஹரிசந்தன், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அதிகாரிகள், மலர்செண்டு அளித்து வரவேற்றனர். பின், கார் மூலம் திருச்சானுார் சென்ற ஜனாதிபதி, தன் குடும்பத்தினருடன் தாயார் சேவையில் பங்கேற்றார். இதையடுத்து, மதியம் திருமலையை அடைந்தார்.சிறிது நேர ஓய்விற்கு பின், ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற ஜனாதிபதியை, தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசனத்திற்கு அழைத்து சென்றனர்.ஏழுமலையானை தரிசித்து திரும்பிய ஜனாதிபதிக்கு, தேவஸ்தான அதிகாரிகள் வேத ஆசீர்வாதம் செய்வித்து, சேஷ வஸ்திரம், ஏழுமலையான் திருவுருப்படம், தீர்த்தம், லட்டு, வடை உள்ளிட்டவற்றை வழங்கினர். இதையடுத்து, சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE