திருவண்ணாமலை : சிறுமியை கடத்திய பாதிரியாருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது அக்காவை 'போக்சோ'வில் போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் 49; பாதிரியார். இவர் ஜவ்வாதுமலை பெருங்காட்டூர் கிராமத்தில் தங்கி மதபோதனை செய்து வந்தார். மேலும் மாணவியருக்கு மாலை நேரத்தில் டியூஷன் நடத்தி வந்தார்.கடந்த மாதம் 24ல் அதே ஊரை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியை ஜெயராஜ் கடத்தி சென்றார். இது குறித்து மாணவியின் தந்தை கொடுத்த புகார்படி ஜமுனாமரத்துார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிரியார் அலைபேசி பயன்படுத்தாமல் இருந்ததால் அவரை கண்டுபிடிப்பது போலீசாருக்கு சிரமமாக உள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலையில் வசித்து வரும் பாதிரியாரின் அக்கா பரிமளாதேவி 53, வீட்டுக்கு மாணவியுடன் தங்கி சென்றது தெரிந்தது. இதையடுத்து சிறுமியை கடத்த உடந்தையாக இருந்ததாக 'போக்சோ' சட்டத்தில் பரிமளா தேவியை போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE