சென்னை: நிவர் புயல் மீட்பு பணிக்காக 14 இந்திய ராணுவ குழுக்கள் தமிழகம் வந்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
நிவர் புயல் தமிழகத்தின் கடலூரை நெருங்கி வருவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது. புயல் பாதிப்பில் இருந்து தப்பிக்க மாநில அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், நிவர் புயல் மீட்பு பணிக்காக 14 இந்திய ராணுவ குழுக்கள் சென்னை மற்றும் திருச்சிக்கு வந்துள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 10 ராணுவ வீரர்கள் இருக்கின்றனர்,' எனக்கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE