சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி அமைத்துள்ள நிவாரண முகாம்களில் சுமார் 1217 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
![]()
|
இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி சார்பில் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட15 மண்டல பகுதிகளில் உள்ள பள்ளிகள் கல்லூரிகள், கோவில்கள் என சுமார் 25க்கும் மேற்பட்ட இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
![]()
|
இம்முகாமில் ஆண்கள் 459, பெண்கள் 499, குழந்தைகள் 259 பேர் என மொத்தம் 1,217 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என மாநகராட்சி செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement