சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை நடைபெற இருந்த யுஜிசி நெட் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
![]()
|
இது குறித்து தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை யுஜிசி நெட் தேர்வுகள் நடைபெற இருந்தன. இந்நிலையில் நிவார் புயல் காரணமாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமைதெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி குறித்து www.nta.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()
|
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE