புதுச்சேரி: மணிக்கு 120 கி.மீ முதல் 140 கி.மீ வேகத்தில் புதுச்சேரிக்கு வடக்கே கரையை கடக்க துவங்கியது நிவர் புயல்.
![]()
|
இதனையடுத்து புதுச்சேரி கடலூர் பகுதிகளில் அதீத கனமழை பெய்துவருகிறது. புயல் கரையை கடந்து வலுவிழந்த பின்னரே மழை படிப்படியாக குறையும். புதுச்சேரியில் இருந்து 40 கி.மீ தொலைவிலும் கடலூரில் இருந்து 50 கி.மீ தொலைவிலும் சென்னையில் இருந்து 120 கி.மீ தெற்கே தொலைவிலும் புயல் கரையை கடக்கிறது .அடுத்து வரும் 3 மணி நேரத்தில் புயலின் மையப்பகுதி கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது.
![]()
|
தொடர்ந்து கண்காணிப்பு:அமைச்சர்
மழை புயல் நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்துவருவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்து உள்ளார். நிவர் புயல் கரையை கடக்க 5 மணி நேரம் ஆகலாம். மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
சென்னையில் 2 நாட்களுக்கு மழை
சென்னையில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு கனமழை இருக்கும் எனவும் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் மின் நிறுத்தம்
நிவர் புயல் கரையை கடக்க துவங்கியதை அடுத்து காஞ்சிபுரம் நகர் முழுவதும் மின்நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. புயல் வேகம் படிப்படியாக குறைந்த பின் மின் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE