சென்னை:சென்னையில், கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை, கொட்டும் மழையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
சென்னை கொளத்துார் அம்பேத்கர் நகர், பெரம்பூர் ரமணாநகர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கொட்டித் தீர்த்த கன மழையால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால், சமையல் செய்யாமல் முடியால், பொதுமக்கள் தவித்தனர்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கொட்டும் மழையில், மழை கோட், தொப்பி, முக கவசம் அணிந்தபடி, சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்து, அவர்களுக்கு ஆறுதல் கூறினார். கொளத்துார், பெரம்பூர், திரு.வி.க., நகரில் உள்ள காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முகாமில் தங்கிஉள்ள மக்களுக்கு, மதிய உணவு, ரொட்டி, பால், பிஸ்கட் மற்றும் போர்வை, துண்டு, உடைகளையும் ஸ்டாலின் வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE