கடலூர்: நிவர் புயலின் கோரத் தாண்டவத்திற்கு தாக்குப் பிடிக்காமல் புயல் கடந்த பகுதியில் ஏராளமான மரங்கள் சாலையோரங்களில் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புயல் அதிகம் பாதித்த மரக்காணம், ஈக்காட்டுதாங்கல், கடலூர், புதுச்சேரி பகுதிகளில் மணிக்கு 120 கி.மீ.க்கு மேல் வீசிய பலத்த காற்றின் காரணமாக ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் பலத்த சூறைக் கற்று வீசியதால் நகரின் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
பல்வேறு மாவட்டங்களில் மரங்களை அகற்றும் பணியில் பேரிடர் மீட்புப்புக் குழுவினர், மற்றும் பொதுமக்கள் முயற்சி எடுத்து வருகின்றனர்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE