சென்னை: நிவர் புயல் காரணமாக தி.மலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய அதிக கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்னும் 3 மணி நேரத்ததிற்கு மேற்கண்ட 4 மாவட்டங்களில் கனமழை தொடரும் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது
கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக வடமாவட்டங்களில் முக்கிய சாலைகளில் மரங்கள் சாய்ந்துள்ளன. அவற்றை அகற்றும் பணியில் பொது மக்கள் மற்றும் மீட்புக் குழுவினர் முயற்சி எடுத்து வருகின்றனர். தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலூரில் மட்டும் நேற்று காலை 6.30 துவங்கி தற்போது வரை 24 செ.மீ., மழை பெய்துள்ளதாக வானிலை மையம் மேலும் அறிவித்துள்ளது.
அதே நேரம் திருச்சி, நாகை, தஞ்சை, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE