சென்னை: நிவர் புயல் தீவிரப் புயலாக வலுவிழந்துள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் அதிதீவிரப் புயலாக நேற்று இரவு 10.40 மணியளவில் புதுச்சேரிக்கு வடக்கே கரைகடக்க துவங்கியது. புயல் கடந்த நேரம் கடலூர், புதுச்சேரி மற்றும் வடக்கு தமிழக மாவட்டங்களில் அதி கனமழை கொட்டியது. காற்றின் வேகம் 120 கி.மீ., வரை இருந்தது.
ஆனால், புயல் முழுமையாக கடக்க தாமதம் ஏற்படும் என வானிலை மையம் அறிவித்தது. குறைந்தது 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் கடந்து வரும் திசைக்கு எதிராக காற்று வீசுவதால் தாமதம் ஏற்படுவதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிவர் புயல் அதிதீவிரப் புயலாக இல்லாமல் தற்போது தீவிரப் புயலாக வலுவிழந்துள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதயைடுத்து சென்னை உட்பட தமிழக வடமாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழையளவு குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE