சென்னை: தீவிர புயலாக இருந்த நிவர், புயலாக வலுவிலந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதி தீவிர புயலாக இருந்த 'நிவர்', கரையை கடக்கும் போது தீவிர புயலாக வலுகுறைந்து, அதிகாலை 2.30 மணியளவில் புதுச்சேரி அருகே முழுவதுமாக கரையை கடந்தது. தற்போது நிலப்பரப்புக்குள் நகர்ந்து வரும் புயல், படிப்படியாக வலுவிழந்து வருகிறது.
தற்போது, புதுச்சேரியில் இருந்து 85 கி.மீ., சென்னையில் இருந்து 95 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ள நிவர், அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் தாழ்வு மண்டலமாகவும் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:
நிவர் புயல் காரணமாக அடுத்த 3 மணி நேரத்திற்கு, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் அடுத்த 3 மணி நேரம் காற்றுடன் கனமழை பெய்யும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE