புதுடில்லி: நிவர் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், புதுச்சேரிக்கு மத்திய அரசு உதவி செய்யும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியுள்ளதாவது : நிவர் புயலை தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிலவும் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தமிழக முதல்வர் பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோருடன் பேசினேன். அப்போது, தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என உறுதியளித்தேன். தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள், மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

We are closely monitoring the situation in Tamil Nadu and Puducherry in the wake of Cyclone Nivar. Have spoken to CM Shri @EPSTamilNadu and CM Shri @VNarayanasami and assured all possible help from the centre. NDRF teams already on ground to help people in need.
— Amit Shah (@AmitShah) November 26, 2020
இவ்வாறு அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE