சென்னை: 2015ம் ஆண்டு வெள்ளத்தில் இருந்து அ.தி.மு.க., அரசு பாடம் கற்று கொள்ளவில்லை என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: 2015 பெருவெள்ளத்தில் இருந்து அதிமுக அரசு பாடம் கற்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மழை நீர் தேங்கிய பகுதிகளில் அதேநிலை தான் நீடிக்கிறது. அரசு எடுத்த நடவடிக்கைகளால், மழைநீர் தேங்கவில்லை என மலையளவு பொய்யை மனம் கூசாமல் சொல்கின்றனர். மழை, வெள்ளம் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

டெல்டாவில் சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயிர்காப்பீடு செய்யவில்லை என தகவல் வந்துள்ளது. பயீர் காப்பீடு கட்டணம் செலுத்துவதற்கான கெடுவை நவ.,30 வரை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE