சென்னை: வரும் 29ம் தேதி தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தெற்கு வங்கக்கடலில் நவ.,29 ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது அடுத்தடுத்த நாட்களில் வலுவடைந்து, தென் மாவட்டங்களை நோக்கி நகரும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 16ம் தேதி குமரிக்கு தென் கிழக்கில், இலங்கைக்கு கிழக்கில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, படிப்படியாக வலுப்பெற்று புயலாகவும், பின் அதி தீவிர புயலாகவும் உருவெடுத்தது. நிவர் என பெயரிடப்பட்ட இந்த புயல், நேற்று(நவ.,25) நள்ளிரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE