நகரி : நகரி பகுதியில், தொடர் மழையால், கொற்றலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
'நிவர்' புயல் காரணமாக, நகரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், இரு நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால், நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.மேலும், ஆந்திர மாநிலம், அம்மப்பள்ளி அணைக்கட்டில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர், நகரி பகுதியில் செல்லும் கொற்றலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.திருத்தணி - நகரி இடையே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலத்தின் மீது, வெள்ள நீர் செல்வதால் போக்குவரத்துக்கு தடைவிதித்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், மழை மற்றும் பலத்த காற்றால், மரங்கள் உடைந்து வீடுகள் மீதும் விழுந்து சேதம் அடைந்தன.இதுதவிர, நகரி அடுத்த, சிந்தலப்பட்டடை, ஏகாம்பரகுப்பம் ஆகிய பகுதிகளில், விவசாயிகள் பயிரிட்டுள்ள நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளது.குறிப்பாக, அறுவடைக்கு தயாராக இருந்த விவசாயிகளின் நெற்பயிர் முழுதும் தண்ணீரில் மூழ்கி உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE