கள்ளக்குறிச்சி : கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, கள்ளக்குறிச்சி பகுதியில் அகல் விளக்கு விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.
கார்த்திகை தீபத் திருவிழா நாளை 29ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றி வழிபடுவது வழக்கம். இதற்கான அகல் விளக்குகள் கள்ளக்குறிச்சி பகுதிகளில் கடைகளிலும், தள்ளுவண்டியிலும், சாலையோர தற்காலிக கடைகளிலும் அதிகளவில் விற்கப்படுகின்றன. 5 ரூபாய் முதல் 10, 20 ரூபாய் வரையிலான பல வித மாடல்களில் அகல் விளக்குகள் விற்கப்படுகின்றன.
கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம், ஆத்துார், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அகல் விளக்குகளை வாங்கி வந்து மந்தைவெளியில் விற்பனை செய்து வருகின்றனர். கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி கள்ளக்குறிச்சியில் அகல் விளக்குகள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE