கள்ளக்குறிச்சி : கோட்டமேடு அருகே சாலையோரமாக கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள், தங்கள் வீடுகளில் சேரும் குப்பைக் கழிவுகளை சாலையோரமாக வீசுகின்றனர்.குப்பைகளை நகராட்சியினர் முறையாக அப்புறப்படுத்தாததால், அதிகளவு தேங்கி தற்போது பெய்து வரும் மழையால் குப்பைகளில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
மேலும், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாவதால் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, சாலையோரமாக கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுவதுடன், அப்பகுதியில் குப்பை தொட்டி வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE