மதுராந்தகம் : மொபைல் போனுக்கு சார்ஜ் ஏற்ற, ஜெனரேட்டரை பயன்படுத்தியதில், அதிலிருந்து வெளியேறிய நச்சு புகையை சுவாசித்த இரு வாலிபர்கள் உயிர் இழந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியைச் சேர்ந்தோர் ராஜேஷ், 26, ராஜேஷ்குமார், 25. கொத்தனாராக இருந்த இவர்கள், செங்கல்பட்டு மாவட்டம், லத்துார் அடுத்த பவுஞ்சூரில், தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் தங்கி, கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தனர். புயல் காரணமாக, இரு தினங்களாக மின் தடை செய்யப்பட்டு இருந்ததால், மொபைல் போனுக்கு சார்ஜ் ஏற்ற, அங்கிருந்த ஜெனரேட்டரை பயன்படுத்த, இருவரும் முயன்றுள்ளனர்.அப்போது, ஜெனரேட்டரில் மின் கசிவு ஏற்பட்டு, அதில் இருந்து நச்சு புகை வெளியேறியதாக கூறப்படுகிறது. இதை சுவாசித்ததால், மூச்சுத்திணறல் ஏற்பட்ட ராஜேஷ் மற்றும் ராஜேஷ்குமார், பரிதாபமாக உயிர் இழந்தனர். இதுகுறித்து, அணைக்கட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE