கூடுவாஞ்சேரி : புயல் மழையால், கூடுவாஞ்சேரியை சூழ்ந்த வெள்ள நீர், நான்கு நாட்களாக அகற்றப்படாததால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சி, மஹாலட்சுமி நகர், ஜெயலட்சுமி நகர், அமுதம் காலனி ஆகிய பகுதிகளில், மழை நீர் தேங்கியுள்ளது.குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால், வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் சிரமப்படுகின்றனர்.இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது: இங்குள்ள கால்வாய்களை துார் வாராததாலேயே, ஒவ்வொரு மழைக் காலத்திலும், இந்நகரில் தண்ணீர் தேங்குகிறது; கடுமையாக பாதிக்கப்படுகிறோம்.மழை பெய்யாத தற்போதும், தேங்கிய நீரை வெளியேற்ற, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர்.
நான்கு நாட்களாக, வெளியே எங்கும் செல்ல முடியாமல், வீடுகளில் முடங்கியுள்ளோம். இந்நீரால், மர்ம காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்று ஏற்படுமோ, அனைவரும் அச்சத்தில் உள்ளனர். வசிப்பிட பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE