ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தில் வாரச் சந்தை திறக்காதாதல் வியாபாரிகள், மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி அலுவலகம் முன் வெள்ளிக் கிழமைகளில் வாரச் சந்தை செயல்படுகிறது. கடந்த வார சந்தையில் கூட்டம் அதிகமாக கூடியது. நேற்று காலை சந்தைக்கு வியாபாரிகள் வந்தனர். மறு உத்தரவு வரும் வரை சந்தையை திறக்க கூடாது என கலெக்டர் உத்தரவிட்டுள்ளதால் அனுமதிக்க முடியாது என பேரூராட்சி சார்பில் கூறப்பட்டது. விற்பனை செய்ய வியாபாரிகள் அனுமதி கோரினர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்து வந்த ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக் டர் வினதா, சப் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், சேகர் வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். நீண்ட துாரத்தில் இருந்து வந்ததாக கூறியதால் சமூக இடைவெளி விட்டு தனித் தனியாக வியாபாரம் செய்ய போலீசார் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் அனுமதியளித்தனர்.இதையேற்று, தனித்தனியாக கடை அமைத்து வியாபாரம் செய்தனர். மறு அறிவிப்பு வரும் வரை வாரச்சந்தை திறக்கப்படாது என அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE