குறிஞ்சிப்பாடி : மணிலா பயிரிடப்பட்ட வயல்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அயன் குறிஞ்சிப்பாடி உழவர்மன்ற விவசாயிகள், வயல்களில் சமீபத்தில் மணிலா சாகுபடி செய்தனர். நிவர் புயல் தாக்கத்தால் அந்த வயல்களில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் மணிலா முளைப்பு திறன் குறைந்து மகசூல் குறையும் என, விவசாயிகள் கவலையடைந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் பாதிக்கப்பட்ட வயல்கள் குறித்த படம், நேற்று வெளியானது.
இதையடுத்து நேற்று குறிஞ்சிப்பாடி வட்டார வேளாண் அதிகாரிகள், வெங்கடேசன், செந்தில்குமார் ஆகியோர் மழைநீர் சூழ்ந்த அயன் குறிஞ்சிப்பாடி மணிலா வயல்களை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறினர்.அதே பகுதி, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தாழை வாய்க்கால் குழாய் பாலத்தை குறிஞ்சிப்பாடி தாசில்தார் தமிழ்ச்செல்வி பார்வையிட்டு, கலெக்டரிடம் பிரச்னை குறித்து தெரிவிப்பதாக கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE