மடிப்பாக்கம் : பணத் தேவைக்காக, பக்கத்து வீட்டில் நகைகள், வெள்ளிப் பொருட்களை திருடிய பெண்ணை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
சென்னை, உள்ளகரம், பாலாஜி நகர், 32வது தெருவைச் சேர்ந்தவர் பிரபு, 27; மென்பொருள் பொறியாளர். நேற்று முன்தினம், இவர் வீட்டை பூட்டி, சாவியை பக்கத்து வீட்டில் வசிக்கும் விஜயலட்சுமி, 33, என்பவரிடம் கொடுத்து, உறவினர் வந்தால் தருமாறு கூறியுள்ளார். இந்நிலையில், வீடு திரும்பிய பிரபு, சாவியை வாங்கி திறந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த, 4 சவரன் நகைகள், 52 கிராம் வெள்ளிப் பொருட்கள் மாயமாகி இருந்தன. இது குறித்து, மடிப்பாக்கம் போலீசார் விசாரித்தனர்.
இதில், கணவர் நடத்தும், மீன் கடையில் நஷ்டம் ஏற்பட்டதால், பணத் தேவைக்காக திருடியதை, விஜயலட்சுமி ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து, நகைகள், வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.பின், விஜயலட்சுமியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE