காரைக்கால் : பைக் மீது வேன் மோதியதில் வாலிபர் இறந்தார்.
நாகை மாவட்டம், கீழ்வேளூர், மாதா கோவில் வீதியை சேர்ந்தவர் வீரமணி மகன் அன்புச்செல்வன்,30; இவர் நேற்று முன்தினம் நிரவியில் உள்ள தனது மனைவியை பார்த்துவிட்டு வீட்டிற்கு பைக்கில் புறப்பட்டார். நிரவி சாலையில் சென்றபோது, எதிரே நாகையில் இருந்த மீன் ஏற்றி வந்த டிஎன்-51-எச்-3956 பதிவெண் கொண்ட வேன் கட்டுப்பாட்டை இழந்து, மோதியது.அதில் படுகாயமடைந்த அன்புச்செல்வனை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.திருப்பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE