புதுச்சேரி : புதுச்சேரியில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தின் நான்கு பகுதிகளிலும் நேற்று முன்தினம் 1,609 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், புதுச்சேரியில் 9, மாகியில் 5, காரைக்கால், ஏனாமில் தலா ஒருவர் என, மொத்தம் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது, மருத்துவமனைகளில் 210 பேரும், வீடுகளில் 304 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் 46 பேர் குணமடைந்தனர். உயிரிழப்புகள் எதுவும் இல்லை. மாநிலத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 856 ஆக உயர்ந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE