சென்னை:சென்னையில், கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று, 392 ஆக குறைந்தது. தமிழகம் முழுதும், 1,442 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 220 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், 61 ஆயிரத்து, 610 மாதிரிகள் நேற்று பரிசோதிக்கப்பட்டதில், 1,442 பேருக்கு தொற்று உறுதியானது. அதிகபட்சமாக சென்னையில், 392; கோவையில், 145; செங்கல்பட்டில், 77; சேலத்தில், 76; திருப்பூரில், 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மார்ச் முதல் நேற்று வரை, 1.18 கோடி மாதிரிகளை பரிசோதித்ததில், சென்னையில், இரண்டு லட்சத்து, 14 ஆயிரத்து, 191 பேர் உட்பட, மாநிலம் முழுதும், ஏழு லட்சத்து, 77 ஆயிரத்து, 616 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றவர்களில், ஒரே நாளில், 1,494 பேர் குணமடைந்தனர். இவர்களுடன் சேர்த்து, ஏழு லட்சத்து, 54 ஆயிரத்து, 826 பேர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.தற்போது, சென்னையில், 3,924; கோவையில், 741; செங்கல்பட்டில், 695; திருப்பூரில், 603; சேலத்தில், 566; திருவள்ளூரில், 522 பேர் உட்பட, 11 ஆயிரத்து, 109 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கொரோனா தொற்றால் நேற்று, ௧௨ பேர் உட்பட, இதுவரை, 11 ஆயிரத்து, 681 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE