ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் மின்சாரம் தாக்கி மேற்குவங்க கூலி தொழிலாளி உயிரிழந்தார்.ராமேஸ்வரத்தில் பீகார், ஒடிசா, மேற்குவங்கத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ராமேஸ்வரம் பழைய போலீஸ் லைன் தெருவில் புதிய வீடுக்கு டைல்ஸ் கல் பதிக்கும் பணியில், மேற்குவங்கத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டனர். அப்போது டைல்ஸ் கல் வெட்டும் இயந்திரத்தின் வயரை நுார்ஜமால்மாலிக்22, என்பவர் சரி செய்த போது மாலிக் மீது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். ராமேஸ்வரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE