வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டிரம்ப், தேர்தலுக்குப் பின், முதன் முறையாக
செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது, 'எலக்டோரல் காலேஜ், ஜோ பைடன்
வெற்றியை அங்கீகரித்தால், நான் அதிபர் பதவியை விட்டு விலகுவேன். வெள்ளை
மாளிகையை விட்டு வெளியேறுவேன். பொறுத்திருங்கள். 2021, ஜன., 20க்குள்
ஏராளமான விஷயங்கள் நடக்கும்' என்றார். எலக்டோரல் காலேஜ் கூட்டம், டிச.,14ல்
நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, ஜோ பைடன் வெற்றி குறித்த
அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE