காரைக்கால்:திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில், டிச., 27ல் நடக்க உள்ள சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, நேற்று பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.
புதுச்சேரி, காரைக்கால் அருகே, திருநள்ளாரில், தர்பாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, சனி பகவான், தனி சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார். நவக்கிரக தலங்களில், சனி பரிகார தலமாக, திருநள்ளார் விளங்கி வருகிறது. இங்கு, இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சனிப்பெயர்ச்சி விழா, மிகவும் பிரசித்தி பெற்றது.
டிசம்பர், 27ம் தேதி அதிகாலை, 5.22 மணிக்கு சனீஸ்வரர், தனுசு ராசியில் இருந்து, மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. இதற்கான பந்தக்கால் முகூர்த்தம் நேற்று காலை நடந்தது.முன்னதாக, கோவில் கொடிமரத்தில் உள்ள விநாயகர் மற்றும் பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. புதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE