தொண்டாமுத்தூர்:பள்ளிக்கு செல்லாத, இடைநின்ற மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் குறித்து, கணக்கெடுக்கும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.கணக்கெடுப்பில் ஒன்று முதல், பிளஸ் 2 வரை உள்ள மாணவர்களின் வருகை பதிவேட்டில் இருந்து, இடைநின்ற மாணவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு, அதனை கள ஆய்வு செய்து, அக்குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்படுவார்கள்.இதற்காக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில், ஒவ்வொரு வட்டாரத்திற்கும் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இக்குழுவில், வட்டார கல்வி அலுவலர், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு கல்வி ஆசிரியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.நவ., 21ம் தேதி துவங்கிய, கணக்கெடுக்கும் பணி டிச., 10ம் தேதி வரை நடைபெறும். இதில் கண்டறியப்படும் குழந்தைகளை, அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்த்து, அரசு வழங்கும் அனைத்து சலுகையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், வட்டார கல்வி அலுவலர் ஸ்ரீகலா தலைமையிலான குழுவினர், வீடு வீடாக சென்று கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், பள்ளிக்கு செல்லாத மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் எவரேனும் இருந்தால், பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு பள்ளியில் தெரிவிக்க வேண்டுமென, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE