மேட்டூர்:சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில், தீவிரம் அடைந்த பருவ மழையால், நேற்று முன்தினம், வினாடிக்கு, 6,512 கன அடியாக இருந்த அணை நீர்வரத்து, நேற்று, 8,111 கன அடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து, குடிநீர் தேவைக்கு, வினாடிக்கு, 500 கன அடி நீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து உயர்வால், நேற்று முன்தினம், 99.32 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நடப்பாண்டில், நான்காம் முறை, நேற்று மதியம், 12:05 மணிக்கு, 100 அடியாக உயர்ந்தது.கடந்த செப்., 25ல், அணை நீர்மட்டம், நடப்பாண்டில் முதல் முறை நிரம்பியது. அக்., 13ல், இரண்டாம் முறை, அதே மாதம், 24ல், மூன்றாம் முறை நிரம்பியது. நேற்று, நான்காவது முறையாக, நீர்மட்டம், 100 அடியானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE